டெல்லி வன்முறை: அசோக் நகர் மசூதி மாடத்தில் காவிக்கொடி ஏற்றியது யார்? - நேரடி ஆய்வு

டெல்லி அசோக் நகரில் வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் காணப்படும் மசூதிக்கு முன்னால் டஜன் கணக்கான மக்கள் கூடியுள்ளனர். இந்த மசூதியின் முன் பகுதி எரிந்து போயிருக்கிறது.


புதன்கிழமை காலை, அசோக் நகரின் தெரு எண் 5 க்கு அருகிலுள்ள பெரிய மசூதிக்கு வெளியே இளைஞர்களுடன் பிபிசி பேச முயன்றபோது, அவர்களது பதிலில் சீற்றம் தெளிவாகத் தெரிந்தது


அவர்களுடனே நாங்களும் மசூதிக்குள் சென்றோம். தரையின் உள்ளே, பாதி எரிந்த நிலையில் தரைவிரிப்புகள் காணப்பட்டன. தொப்பிகள் அங்கும் இங்கும் சிதறிக் கிடந்தன.


இமாம்கள் நிற்கும் இடம் முற்றிலும் கருகிவிட்டது.