இந்த பகுதியில் வசிக்கும் இந்துக்களிடமும் பேசினோம். இந்த மசூதி பல ஆண்டுகளாக இங்கு உள்ளது என்று இந்த மக்கள் கூறினர். இந்த மசூதியை சேதப்படுத்தியவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
வெளியில் இருந்து வந்தவர்களை தாங்கள் தடுக்க முயன்றிருந்தால், தங்களையும் அவர்கள் கொன்றிருக்கலாம் என்று அந்தப் பகுதியில் வசிக்கும் இந்துக்கள் அச்சத்தை வெளிப்படுத்தினார்கள்.
பிபிசியின் கொள்கைகளின்படி, இந்த சம்பவத்தின் தீவிரத்தன்மை மற்றும் சூழ்நிலையின் உணர்வு ரீதியிலான நிலையைக் கருத்தில் கொண்டு, சம்பவ இடத்தில் இருந்த சிலருடைய கருத்துக்களையும், அங்குள்ள நிலவரத்தையும் நாங்கள் வெளியிடவில்லை. ஏனெனில் அவை உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியதாக இருக்கலாம்.